Sunday, August 2, 2009

குட்டி குட்டி ஜோக்ஸ்.. 6



இந்தப் படத்தை டீ.வி.க்கு கொடுக்கணும்ன்னு திட்டம்
போட்டே தயாரிச்சுருப்பாங்க போல..

ஏன் அப்படிச் சொல்றீங்க..?

படம் பூரா 20 நிமிஷத்துக்கு ஒருதடவை விளம்பரங்கள் வருதே..!
_________________

நான் சின்னவயசில 5 மைல் நடந்து போய் சங்கீதம் கத்துண்டேன்..

அப்போலேருந்தே உங்களுக்கும் சங்கீதத்துக்கும் ரொம்பதூரம்ன்னு
சொல்லுங்க..!
_________________

ஹலோ வசந்த் & கோ தானே..? எனக்கும் மனைவிக்கும்
பெரிய சண்டை.. உடனே வாங்க..

நாங்க எதுக்கு வரணும்..?

நீங்கதானே சார் சொன்னீங்க.. டீ.வி. வாங்கி ரெண்டு வருஷம்
வரைக்கும் எந்தப் பிரச்சினையா இருந்தாலும் நாங்க வந்து
தீர்த்து வைப்போம்ன்னு..!
_________________

என்னடா.. மருந்துக் கம்பெனிக்கு வேலைக்குப் போனியே..
எப்படி இருக்கு../

மாசம் ரெண்டாகுது.. மருந்துக்குக் கூட சம்பளத்தைக் கண்ணுல
காட்ட மாட்டறானுகடா..!
_________________

என்னங்க...இந்தப் புடவை எனக்கு அழகா இருக்காங்க..?

ம்ம் நல்லாருக்கு.. கடைக்காரன் அப்பவே சொன்னான்.. எந்தக்
கழுதைக்கு கட்டினாலும் நல்லா இருக்கும்ன்னு..!
_________________

தொண்டன் 1 ; ஏண்ணே.. நம்ம தலைவர் மலச்சிக்கலில்
அவதிப்படறாரோ..?

தொண்டன் 2 ; ஏன் அப்படிக் கேட்கிறே..?

தொண்டன் 1 ; இன்று முக்கிய பேட்டி தர்றதா நிருபர்களை
வரச் சொல்லியிருக்காரே..!
_________________

தொண்டன் 1 ; என்ன இருந்தாலும் பணம் சம்பாதிக்கறதில
நம்ப தலைவரை அடிச்சுக்க முடியாது..

தொண்டன் 2 ; எப்படிச் சொல்றே..?

தொண்டன் 1 ; நேத்து 10 பேர்கிட்ட பிளேன்ல கண்டக்டர்
வேலை வாங்கித் தரேன்னு சொல்லி பணம் கறந்துட்டாரே..!
_________________

திருடன் ; நான் 3 கொலை பண்ணினவன்.. ஒழுங்கா பீரோ
சாவியக் கொடு..

டாக்டர் ; நான் 10 ஆபரேஷன் பண்ணினவன்.. ஒழுங்கா
ஓடிப் போயிடு..!
_________________

டாக்டர் ; நடக்கக் கூட முடியாம வந்தாரே ஒரு பேஷண்ட்...
இப்போ எப்படி இருக்கார்..?

நர்ஸ் ; வர்றியா.. ஓடிப் போகலாம்ன்னு என்னைப் பார்த்து
கேட்கிற அளவுக்கு தேறிட்டார் டாக்டர்..!
_________________

விருந்தாளி ; வாசல் வரை வந்து வழியனுப்பறது ரொம்ப
சந்தோஷமா இருக்குங்க..

வீட்டுக்காரர் ; நேத்துதான் புது செருப்பு வாங்கினேன்.. யாரையும்
நம்ப முடியலீங்க..!

குட்டி குட்டி ஜோக்ஸ்.. 5.

அப்பா ; உன்னை பார்த்து எப்போதும் வழிவான்னு சொன்னியே..
ஒரு பையன்.. அவன் இனி வரமாட்டான்..

மகள் ; அய்யோ.. அவனை என்னப்பா பண்ணினீங்க ?

அப்பா ; பதறாதே.. 1000 ரூபாய் கடன் கேட்டான்.. கொடுத்தேன்..!
_________________

ப.வீ.காரர் ; மிஸ்டர் மொக்கை.. உங்ககிட்ட இருக்கற ரயில்வே
கைடு கொஞ்சம் கொடுங்களேன்.. கும்பகோணத்திலிருந்து
சென்னை எவ்வளவு தூரம்ன்னு பார்த்துட்டு தரேன்..

மொக்ஸ் ; அடடே.. அது பழைய கைடாச்சே.. இப்போ எல்லாம்
மாறிப் போயிருக்குமே..!
_________________

சார்.. நீங்க எழுதிட்டு வர்ற தொடர்கதை இந்த வாரம் சூப்ப்ர்..
அதிலும் அந்தக் கடைசி வரி... ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு சார்..!

அப்படியா..? என்ன அது கடைசி வரி.. ?

அடுத்த இதழில் முடியும்ன்னு போட்டிருக்கே.. அதான்..!
_________________

காதலன் ; உனக்கு 5 ரூபாய் தருகிறேன்.. உங்க அக்கா
என்ன செய்யறான்னு சொல்றியா..?

காதலியின் தம்பி ; இன்னும் 5 ரூபாய் சேர்த்துக் கொடு..
எங்க அப்பா உன்னை என்ன செய்யப்போறார்ன்னு சொல்றேன்..!
_________________

என்ன மொக்கை சார்.. டூத் பேஸ்டை தலையில்
தேய்ச்சுகிட்டு இருக்கீங்க..?

ஈறு உபாதைக்கு சிறந்ததுன்னு போட்டிருக்குதே.. எனக்கு தலை
பூரா ஈரும் பேனுமா இருக்கு..!
_________________

நண்பர் ; மொக்கை சார்..! நீங்க எழுதியிருக்கற கதையை
எங்கேயோ படிச்சது போல இருக்கே..?

மொக்ஸ் ; உங்களுக்கு இந்தி படிக்கத் தெரியுமா..?

நண்பர் ; தெரியாதே சார்..

மொக்ஸ் ; அப்பன்னா நீங்க இந்தக் கதையை ஏற்கனவே
படிச்சிருக்கவே முடியாது..!

ரமா ஜெயம்...!

டாக்டருக்கு இதுதான் முதல் ஆபரேஷனா ஸிஸ்டர்..?

ஆமாம்.. எப்படித் தெரியும்..?

ஆபரேஷன் வாங்க கத்தி வாங்கணும்ன்னு அட்வான்ஸ் கேட்கறாரே..!
_________________

போலீஸ் ; உங்க வீட்ல திருடிக்கிட்டு ஓடின வேலைக்காரி
அங்க அடையாளம் சொல்ல முடியுமாம்மா..?

எஜமானி ; என்னங்க.. எதோ கேக்கறாங்க பாருங்க.. !
_________________

ஆசிரியர் ; அக்கால ஆட்சிக்கும் இக்கால ஆட்சிக்கும் என்ன வேறுபாடு..?

சின்னா ; அப்போ கல்வெட்டு.. இப்போ கட் அவுட்டு..!
_________________

ஏண்டி..? பக்கத்து வீட்டுக்கு புதுசா குடிவந்தவங்க பொண்ணு
பேரு ரமாவா..?

ஆமாங்க.. ஏன் கேக்கறீங்க..?

இங்கே பாரு உன் பையன் ராமஜெயம் எழுதியிருக்கிற அழகை..
ரமா ஜெயம்..ரமா ஜெயம்ன்னு !
_________________

காதலி ; ஒண்ணு நாம கல்யாணம் பண்ணிக்கணும்.. இல்லே
தற்கொலை பண்ணிக்கணும்.. என்ன கோபால் சொல்றீங்க..?

காதலன் ; எப்படியும் நான் தப்பிக்கவே வழி இல்லையா கீதா..?
_________________

அப்பா ; உன் வகுப்புல மொத்தம் 53 பேர் தானே..?

சின்னா ; அட.. எப்படிப்பா சரியா சொல்றீங்க..?

அப்பா ; உன் ரேங்க் பார்த்தாலே தெரியுதே..!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

டேனி ; இரண்டாம் புலிகேசி எப்போது முடிசூட்டிக் கொண்டார்..?

சின்னா ; முதலாம் புலிகேசி இறந்த பிறகு சார்..!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஏட்டு ; சார்.. நாம சாப்பிட்டுகிட்டு இருந்தப்போ கைதி
நைஸா தப்பிச்சிட்டான் சார்..

இன்ஸ் ; அடப்பாவி.. இப்படி கோட்டைவிட்டுத்
தொலைச்சிட்டியே.. இப்போ சாப்பிட்டதுக்கு யார் காசு
கொடுப்பாங்க..?

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

நீதிபதி ; கொலையைக் கண்ணால பார்த்த சாட்சி நீ தானே..?
குற்றம் நடந்த சூழ்நிலையை அப்படியே விவரி பார்ப்போம்..

சாட்சி ; இந்தக் கோர்ட்டுதான் பொறம்போக்குன்னு வச்சுக்குங்க..
நீங்க ஒரு குட்டிச்சுவரு..இந்த வக்கீலு கழுதை.. அந்த வக்கீலு
புண்ணாக்கு மூட்டை.. அந்த போலீஸ்காரய்யா பாழுங்கிணறு..
இதுக்கு நடுவுலதானுங்கய்யா கொலை உழுந்துச்சு..!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

நீதிபதி ; கொலை நடந்ததுக்கு காரணம் நட்புதான்னு சொல்றீயே..
கொலை ஆனவரும் நீயும் நண்பர்களா இருந்தீர்களா..?

குற்றவாளி ; அந்த ஆளோட சம்சாரமும் நானும் நண்பர்கள் எசமான்..!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பியூலாஸ்ரீ ; இந்தப் படத்துல ஏல்லாமே உங்களைச் சுத்தி வர்ற
மாதிரி கேரக்டர்ன்னு சொல்லி ஏமாத்திட்டானுகடி..

தோழி ; எப்படிடி..?

பியூலாஸ்ரீ ; குடை ராட்டினம் சுத்தறவளா நடிக்க
விட்டுட்டானுக படுபாவிப் பசங்க..!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

நீலாவைக் காட்டினா

ஆபரேஷனுக்கு அப்புறம் கண்ணு நல்லா தெரியுது டாக்டர்..

நான் நர்ஸ்.. டாக்டர் அங்க இருக்கார்...!
__________________________________________________ _________________

நீ காதலிச்சவனையே கல்யாணம் பண்ணிக்க
சம்மதம்ன்னு சொல்லிட்டேனே.. அப்புறம் என்னம்மா யோசிக்கிறே..?

இல்லப்பா.. அதில யாரைக் கல்யாணம்
பண்ணிக்கலாம்ன்னு யோசிக்கிறேன்..!
__________________________________________________ __________________

அடேய் சின்னா.... எரிபொருள்ன்னா என்ன..?

டிஞ்சர் சார்..
__________________________________________________ ___________________

என்னங்க..உடனே உங்க தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைங்க..

எதுக்கு இவ்ளோ அவசரம்..?

உங்க அம்மாவையும் அக்காவையும் என்னாலே தனியா
சமாளிக்க முடியலே..!
__________________________________________________ ____________________

திருடன் ; நீ அப்படியே குந்து சார்.. சாவி எங்கே
இருக்குமுன்னு எனக்குதான் தெரியுமே .. நான் எடுத்துக்கறேன்..
நான் என்ன புதுசாவா வர்றேன்..?
__________________________________________________ ____________________

சினிமா உலகத்தில இவ்வளவு நாளா இருக்கீங்களே மேடம்..
எப்படி மூடிஞ்சது..? உணவுக் கட்டுப்பாடா..? மனசுக் கட்டுப்பாடா..?

ரெண்டும் இல்ல.. குடும்பக் கட்டுப்பாடு..!
__________________________________________________ ____________________

முற்பகல் செயின் என்று தொடங்கும் குறள் சொல்..

பிற்பகல் அடகு வை..!
__________________________________________________ ____________________


ஹலோ .. டாக்டர்.. ! காலையில 8 மணிக்கு என் மனைவி மூச்சு
பேச்சு இல்லாம விழுந்துட்டா டாக்டர்..

அடப்பாவி.. ! இப்போ மதியம் 3 மணி ஆகுது.. இவ்வளவு
நேரம் என்னய்யா பண்ணினே..?

சந்தோஷத்துல கையும் ஓடல.. காலும் ஓடல.. டாக்டர்..!
_________________

எஙக டாக்டர் ஆபரேஷனுக்குப் பிறகும் நோயாளிகளை
வரவழைச்சுப் பேசுவார்..

அப்படியா..? அது என்ன பழக்கம்..?

ஆவிகளோடு பேசும் பழக்கம்..!
_________________

காதலன் ; கண்ணே நீ சொல்லப் போற அந்த மூணு வார்த்தை
என்னை காத்தில மிதக்க வைக்கணும்.. ப்ளீஸ்.. சொல்லேன்..

காதலி ; போய் தூக்குல தொங்கு..!
_________________

என்னங்க.. உங்க புள்ளையும் உங்களைப் போலதான் இருக்கான்..

அவ்வளவு புத்திசாலியா..?

இல்லே.. .. நிலாவைக் காட்டினா சோறு திங்க மாட்டுறான்..
எதிர் வீட்டு நீலாவைக் காட்டினா இளிச்சுகிட்டு திங்கிறான்..!

Tuesday, July 28, 2009

குட்டி குட்டி ஜோக்ஸ்..4

படம் சக்கைப்போடு போடுறமாதிரி ஒரு தலைப்பு சொல்லுங்க"

"கரும்பு"
________________________________________

என்ன உங்க மனைவி உங்களை மதிக்கவே மாட்டேங்கிறh .. .. ?

பத்தாயிரம் ரூபாய் சம்பாளம் வாங்கற திமிரு .. ..

ஓ...வேலைக்குப் போறhங்களா .. .. ?

நீங்க வேற .. .. அவ வாங்கறது என்னோட சம்பளத்தை .. ..
________________________________________

என் பெண்ணோட பயோ - டே;டடாவைப் பார்த்துட்டு
மாப்பிள்ளை பையன் என்ன சொன்னான் ?

அந்தப் பய டாட்டா காட்டிட்டுப் போயிட்டான் *
________________________________________

வேலை செய்யற இடத்துலே வேலையை நல்லா கத்துக்கிட்டு
சொந்தமா தொழில் ஆரம்பிக்கிறது தப்பா * அதுக்கு போயி
என் மகனை உள்ளே தள்ளிட்டாங்க *

உங்க பையன் எங்கே வேலை செய்தான் ?

ரூபா நோட்டு அச்சடிக்கிற நாசிக் பிரஸ்ல *.
________________________________________

அவன் ; போன மாசம்தான் என்னை ஈவ் டீஸிங்னு போலீஸ்ல
பிடிச்சுக் கொடுத்தே. ஆதுக்குள்ளே இப்ப என்ன லவ் லெட்டர் ?

அவள் ; போலீஸ்ல நீங்க அறை வாங்கினதைப் பார்த்ததும்,
மனசு இளகி காதலாயிடுச்சுங்க.
________________________________________

நான் இப்ப தலைநிமிர்ந்து பேசறதுக்கு நீங்கதான் காரணம்.

அப்படி நான் என்ன பெரிசா செஞ்சிட்டேன் ?

என்னைவிட ரொம்ப உயரமா இருக்கீங்களே *
__________________

குட்டி குட்டி ஜோக்ஸ்..3.

பெண் பாடகி ஏன் உணர்ச்சி இல்லாமப் பாடறhங்க ?

பெண் பாவம் பொல்லாததாம் ..!

*********

அலைகடலென திரண்டிருக்கும் உங்களைப் பார்க்கும் பொழுது...

நீ உப்பு வித்தது ஞாபகம் வந்திடுச்சா ?

*********

பஸ்ஸில் உனக்குப் பட வாய்ப்பு கிடைச்சதா ? என்ன சொல்றே ?

ஒரு பெண்ணின் மீது *

*********

ஆபீஸை மையமா வெச்சு ஒரு படமா ? என்ன தலைப்பு ?

போர்வை ஒன்றே போதுமே *

*********

அந்த நடிகையின் ரெக்கார்டு 10-10-15-2.

அப்படியா ?

ஆமா * 10 முறை கல்யாணம், 10 முறை டைவர்ஸ், 15 குழந்தைகள், 2 முறை இரட்டைக் குழந்தைகளாம் *

**********

என்னய்யா இது... ஊது பத்தி புகை-யைப் படம் எடுத்து இணைத்திருக்கிறhய் ?

அப்ளிகேஷன்ல புகைப்படம் இணைக்கவும்னு போட்டிருந்ததே சார்... அதான். ..*

**********

தினமும் பீச்சுக்கு வந்ததும் என்னை நிக்கச் சொல்லி சுத்தி வர்றீங்களே... ஏன் டார்லிங் ?

எனக்கு ஜhதகத்துல தோஷம் இருக்கறதால தினமும் சனீஸ்வரனை சுத்திவரணும்னு nஜhஸியர் சொல்லி யிருக்காரே *

**********

தலைவர் வீட்ல ஆயிரக்கணக்குல செருப்புகள் இருந்ததுக்கு, அதிகாரிகள் கணக்கு கேட்டாங்களாமே... தலைவர் என்ன சொன்னார் ?

வாங்கினா கணக்கு காட்டலாம். மேடைல வந்து விழுந்ததுக்கெல்லாம் எப்படி கணக்கு காட்டறதுன்னாராம்.. *

**********

உன் மூணாவது பையனுக்குப் பெண் பார்க்கறீயாமே, மருமகள் எப்படி இருக்கணும் ?

என்னோட கூட்டணி அமைச்சு, என் மூத்த மருமகள்களை ஓரங்கட்டணும். ..*

**********

பையன் உங்க குடும்ப நன்மையை உத்தேசித்து இந்தக் கேள்வி, எப்ப நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க ?

பெண் செருப்பாலடிப்பேன், அதைக் கேட்க நீ யாரு ?

பையன் உங்க தங்கையோட லவ்வர் தான்.

***********

காதலன் கண்ணே உனக்காக இமயமலையையும் தாண்டுவேன் ,,,,,,

காதலி அதுக்காக ஏன் ஒரு காலை நொண்டறீங்க ?

காதலன் உங்க வீட்டு கேட்டை தாண்டும் போது தடுக்கி விழுந்துட்டேன்.

************

நண்பர் கவர்னர் பதவிக்கு உங்க பெயர் அடிபடுது ,,,,, நீங்க

என்னடான்னா கவலையா காட்சி தர்றீங்களே ?

அரசியல்வாதி இந்த தடவையாவது எப்படியும் ஜெயிச்சிடணுங்கற

கவலைதான்.

*************

குட்டி குட்டி ஜோக்ஸ்..

"பர்ஸ் தொலஞ்சு போச்சு. டிபன் சாப்பிட முடியல."

"உனக்கேது பர்ஸ்?"

"எனக்கு டிபன் வாங்கித் தரேன்னு சொன்னவர் பர்சு தொலஞ்சு போச்சுன்னு சொல்றேன்..."




"பக்கத்து தெரு பொண்ணுக்கு 'லவ் லெட்டர்' கொடுத்த ஆளை உங்க அம்மா செமத்தியா அடிச்சாங்கண்ணு சொல்றியே... உங்க அம்மாவுக்கு என்ன அவ்வளவு அக்கறை?"

"லவ் லெட்டர் கொடுத்தவர் எங்க அப்பாதானே..."




"தலைவர் ரெண்டே வார்த்தை சொல்லி தொண்டர்கள் அத்தனை பேரையும் மகிழ வச்சிட்டாரு..."

"அப்படி என்ன சொன்னாரு..?"

"ராஜினாமா பண்றேன்'னாரு..."





"எங்க வீட்டு நாய் நேற்று செத்துப் போச்சு. எங்க அம்மாவால் இதை ஜீரணிக்கவே முடியல."

"உங்க அம்மா ஏங்க நாயைப் போய்ச் சாப்பிடுறாங்க?"






ஒரு வாசகர் கடிதம் :

ஆசிரியர் அவர்களுக்கு,

இந்த வாரத் தலையங்கம் டாப் டக்கர். அசத்திவிட்டீர்கள் அசத்தி!

பின்குறிப்பு : ஒருவேளை தலையங்கம் எழுதாவிட்டால் 'கார்ட்டூன்' என்று மாற்றிக் கொள்ளவும்.




அவர் : இன்ஸ்பெக்டர் சார், இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள எப்படியாவது என் பையனைக் கண்டுபிடிச்சுக் குடுத்துடுங்க.

இன்ஸ்பெக்டர் : ஏங்க இப்படி அவசரப்படறீங்க?

அவர் : இல்லேன்னா எடுத்துக்கிட்டுப் போன இரு நூறு ரூபாயையும் செலவழிச்சுடுவான்.


--------------------